வருகின்ற செவ்வாய் மாலை 5.00 மணிக்கு நற்செய்திப் பணிக்குழுவினரின் செபமாலையும் நற்செய்திப் பகிர்வும் நடைபெறும்.
வருகின்ற வெள்ளியன்று மாலை 6 மணிக்குத் திருச்சிலுவைப் பாதை நடைபெறும். திருச்சிலுவைப்பாதையைச் சிறப்பிக்க நற்செய்திப் பணிக்குழு, திருக்குடும்ப சபை, பாத்திமா பெண்கள் இயக்கம், தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம், கத்தோலிக்க சமுதாய நலக்குழு, வின்சென்ட் தே பவுல் சபை ஆகியவற்றின் உறுப்பினர்களை அழைக்கின்றோம். சிலுவைப்பாதையைத் தொடர்ந்து திருப்பலி நடைபெறும்.
வருகின்ற சனி மாலை 5.30 மணிக்குப் பங்குக் கோயிலிலிருந்து தவப்பயணமாக ஊர்மெச்சிக்குளம், புனித அந்தோனியார் கோயிலை நோக்கிச் செல்ல உள்ளோம். தவப்பயணத்தின் நிறைவில் திருப்பலி நடைபெறும்.
மார்ச் 29 அன்று குருத்து ஞாயிறை முன்னிட்டு காலை 7.30 மணிக்குக் கல்லறைத் தோட்டத்தில் குருத்தோலை உலா தொடங்கும். அதனைத் தொடர்ந்து பங்குக் கோயிலில் திருப்பலி நடைபெறும்.
மார்ச் 29 அன்று காலை 7.30 மணிக்கு ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் குருத்தோலை உலா தொடங்கும். அதனைத் தொடர்ந்து திருஇதய ஆண்டவர் கேயிலில் திருப்பலி நடைபெறும்.
மார்ச் 29 அன்று குருத்து ஞாயிறை முன்னிட்டு நமது பங்கில் குருதிக்கொடை முகாமும் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளன. குருதிக்கொடை முகாமினை இளைஞர் இயக்க உறுப்பினர்களும் மருத்துவ முகாமினை கிறிஸ்தவ சமுதாய நலக்குழு, திருக்குடும்ப சபை, நலவாழ்வுப் பணிக்குழு ஆகிய அமைப்புகளது உறுப்பினர்களும் இணைந்து ஒருங்கிணைக்க உள்ளனர்.
© 2025 All Rights Reserved | Design by SR HARDWARE & SOFTWARE SERVICES & RANIAMMA TRAVELS